Paristamil Navigation Paristamil advert login

பசில் ராஜபக்‌ஷவைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

 பசில் ராஜபக்‌ஷவைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

17 ஆனி 2026 புதன் 14:25 | பார்வைகள் : 201


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன இன்று புதன்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து தொடர்பான விசாரணை பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபா நிதியை ஊவா மாகாண சபை தேர்தலுக்காக முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் ரூமி ஜவ்பர் 10 மில்லியன் ரூபா சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

மேலும், 3 ஆம் சந்தேகநபர் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்குவதுக்கும் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளார்.