Paristamil Navigation Paristamil advert login

மஹிந்தவின் மகன் யோஷித ராஜபக்ஷ கைது

மஹிந்தவின் மகன் யோஷித ராஜபக்ஷ கைது

17 ஆனி 2026 புதன் 10:04 | பார்வைகள் : 150


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (17) காலை, இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை அகாடமியில் இணைந்தது தொடர்பான விசாரணை ஒன்றுக்காக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்திருந்த அறிவித்தலுக்கு அமைய அவர் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.