Paristamil Navigation Paristamil advert login

புதன்கிழமை முதல் மே மாத இறுதியை விட அதிக வெப்பநிலை: Météo-France எச்சரிக்கை!!

புதன்கிழமை முதல் மே மாத இறுதியை விட அதிக வெப்பநிலை:  Météo-France எச்சரிக்கை!!

14 ஆனி 2026 ஞாயிறு 21:53 | பார்வைகள் : 417


தேசிய வானிலை அமைப்பான Météo-France, ஜூன் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து கடுமையான வெப்பநிலை உயர்வு ஏற்படும் என்றும், அது வெப்ப அலையாக (vague de chaleur) மாறக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த வெப்பநிலை மே மாத இறுதியில் பதிவான அளவுகளை விட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை Nevers நகரில் 38°C, பரிஸ் மற்றும் Brive நகரங்களில் 37°C, லியோனில் 36°C, துலூஸில் 35°C வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவை பருவகாலத்தின் இயல்பான வெப்பநிலையை விட மிகவும் அதிகமானவை.

வெப்ப அலையை அறிவிக்க, தேசிய வெப்பக் குறியீடு (ITN) தொடர்ந்து மூன்று நாட்கள் 23.4°C-ஐ மீற வேண்டும்; அதில் ஒரு நாளாவது 25.3°C-ஐ தாண்டியிருக்க வேண்டும். குறுகிய இரவுகள் காரணமாக வெப்பநிலை இரவிலும் அதிகமாகவே நீடிக்கும் என்பதால் இந்தக் குறியீடு மேலும் உயர வாய்ப்புள்ளது.

வார இறுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தால் வெப்பம் குறையக்கூடும். விஞ்ஞானிகளின் கருத்துப்படி, அடிக்கடி ஏற்படும் இவ்வாறான வெப்ப அலைகள் புவி வெப்பமயமாதலின் தெளிவான அறிகுறியாகும்; எதிர்காலத்தில் அவை மேலும் அதிகரித்து, நீண்ட காலம் நீடித்து, தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.