Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் கையேந்தி யாசகம் செய்யும் ரோபோ

சீனாவில் கையேந்தி யாசகம் செய்யும் ரோபோ

14 ஆனி 2026 ஞாயிறு 09:11 | பார்வைகள் : 197


சீனாவில் ரோபோ ஒன்று சாலையில் மண்டியிட்டு, கைகூப்பி பிச்சை எடுக்கும் காணொளி காட்சி இணையதளங்களில் பரவி வருகின்றது.

சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, "AI ரோபோக்களால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று பயந்தோம்.

ஆனால் அவை பிச்சை எடுக்கும் வேலையையும் விட்டுவைக்கவில்லை" என்று இணையவாசிகள் பலரும் நகைச்சுவையாகவும் கவலையுடனும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.