Paristamil Navigation Paristamil advert login

அதிமுகவின் நிலை இனி கேள்விக்குறி தான்; அமைச்சர் செங்கோட்டையன் ஆரூடம்

அதிமுகவின் நிலை இனி கேள்விக்குறி தான்; அமைச்சர் செங்கோட்டையன் ஆரூடம்

7 ஆனி 2026 ஞாயிறு 06:06 | பார்வைகள் : 502


அதிமுகவின் நிலை இனி கேள்விக்குறி தான் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

அவரது பேட்டி;

எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமை என்பது வேறு, இன்று இருக்கின்ற தலைமை வேறு. இன்று இருக்கிற தலைமை கூட்டுத்தலைமையே தவிர தனிப்பட்ட தலைமை அல்ல.


ஆகவே பல்வேறு நண்பர்கள்(அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்களை குறிப்பிடுகிறார்)  இன்றைக்கு தவெகவில் தங்களை இணைத்து கொண்டு உள்ளனர். இப்படியே போனால் அதிமுகவின் நிலை இனி கேள்விக் குறியாகத் தான் இருக்கும்.


இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.