Paristamil Navigation Paristamil advert login

1982 Rue des Rosiers தாக்குதல் - Hicham Harb பிரான்சிடம் ஒப்படைப்பு

1982 Rue des Rosiers தாக்குதல் - Hicham Harb பிரான்சிடம் ஒப்படைப்பு

17 சித்திரை 2026 வெள்ளி 21:16 | பார்வைகள் : 279


1982 ஆம் ஆண்டு பாரிஸ் Rue des Rosiers பகுதியில் நடைபெற்ற யூத விரோதத் தாக்குதலின் முக்கிய சந்தேகநபரான Hicham Harb (உண்மைப் பெயர் : Mahmoud Khader Abed Adra) பிரான்சிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி

9 ஓகஸ்ட் 1982, பாரிஸ் Marais பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் கைக்குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.இந்த தாக்குதல் யூத விரோத (antisémite) தன்மை கொண்டதாகக் கருதப்பட்டது.

6 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

தாக்குதல் பிரான்சின் சமீபத்திய வரலாற்றில் மிகக் கடுமையான யூத விரோதச் சம்பவங்களில் ஒன்று

பிரான்சிடம் ஒப்படைக்கப்பட்ட நபர்: Hicham Harb / Mahmoud Khader Abed Adra , உண்மைப் பெயர் : Mahmoud Khader Abed Adra,

அறியப்படும் பெயர் : Hicham Harb

வயது 72

தேசியம் : பாலஸ்தீனியர்

வசித்த இடம் : கடந்த 10 ஆண்டுகளாக Cisjordanie


அவர்மீது உள்ள குற்றச்சாட்டுகள்:

தாக்குதலின் மேற்பார்வையாளர் என சந்தேகிக்கப்படுகிறார்

இலக்கை தேர்ந்தெடுத்தவர்

ஆயுதக் களஞ்சியத்துடன் இணைப்பை ஏற்படுத்தியவர்

தாக்குதல் குழுவின் தப்பிச் செல்லும் பாதையை திட்டமிட்டவர்


அவர் மீது:

2016 இல் வெளியிடப்பட்ட சர்வதேச பிடியாணை

1988 ஜெர்மன் பிடியாணை (1985 Frankfurt விமான நிலையத் தாக்குதல் தொடர்பாக)

இத்தாலி பிடியாணை  (1982 ரோம் சினகாக் தாக்குதல் தொடர்பாக)

பாலஸ்தீன அதிகாரிகள் அவரை செப்டம்பர் 2025 இல் கைது செய்தனர் .இது பிரான்ஸ் பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் சில நாட்களுக்கு முன்னராக என்பது குறிப்பிடத்தக்கது.

17 ஏப்ரல் 2026 அன்று அவர்
→ Villacoublay விமானத் தளம் மூலமாக பிரான்சிற்கு கொண்டு வரப்பட்டார்
→ உடனடியாக நீதித்துறை காவலில் வைக்கப்பட்டார்

ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிக்கை:

பாலஸ்தீன அதிகாரிகளின் ஒத்துழைப்பை வரவேற்றது

“தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பாலஸ்தீனத்தின் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது” என தெரிவித்தது

இது Mahmoud Abbas மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதிக்கிடையிலான உறுதிமொழியின் தொடர்ச்சி எனக் கூறப்பட்டது

சந்தேகநபரின் வழக்கறிஞர், இந்த ஒப்படைப்பு பாலஸ்தீன அடிப்படை சட்டத்தின் கடுமையான மீறல்,  “ஆபத்தான முன்னுதாரணம்” எனக் கண்டித்துள்ளார்.

இதன் அடிப்படையில், Hicham Harb மீது, நீண்டகாலமாக நிலுவையில் இருந்த நீதித்துறை நடவடிக்கை  இப்போது செயல்பாட்டில் உள்ளது

40 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒரு முக்கிய பயங்கரவாத வழக்கில் முன்னேற்றம், பிரான்ஸ்–பாலஸ்தீன ஒத்துழைப்பின் தூதரக முக்கியத்துவம்.

Rue des Rosiers தாக்குதலின் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, நீதி நோக்கி ஒரு புதிய கட்டம். நீதித்துறை செயல்முறை அடுத்த மாதங்களில் தொடரும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்