Paristamil Navigation Paristamil advert login

2025 இல் பிரான்சில் பாலியல்,பாலின அவமதிப்புகள் அதிகரிப்பு!!

2025 இல் பிரான்சில் பாலியல்,பாலின அவமதிப்புகள் அதிகரிப்பு!!

16 சித்திரை 2026 வியாழன் 15:52 | பார்வைகள் : 358


பிரான்சில் 2025 ஆம் ஆண்டில் பாலியல் மற்றும் பாலின அவமதிப்புகள் (outrages sexistes et sexuels)  17% அதிகரித்துள்ளன என உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2025 இல் மொத்தம் 3,900 குற்றச்செயல்கள் காவல்துறை மற்றும் ஜோந்தாமெரி மூலம் மூலம் பதிவு செய்யப்பட்டன.

இதில் 26% சம்பவங்கள் கடுமையான சூழ்நிலைகளால் குற்றம் ( délit) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எங்கு அதிகம்? யார் பாதிக்கப்படுகிறார்கள்?

பெரிய நகரங்களில் மிக அதிகம்:
100,000 பேருக்கு 6.4 சம்பவங்கள்  
 

பாரிஸ் பெருநகரப் பகுதியில்100,000 பேருக்கு 8.5 சம்பவங்கள்(நாட்டில் மிக உயர்ந்த விகிதம்)

தேசிய காவல்துறை தரவுகளின்படி:

10 இல் 9 சம்பவங்கள் பெண்களை குறிவைக்கின்றன.

குற்றவாளிகளில் 97% ஆண்கள்.

14% சம்பவங்கள் பொதுப் போக்குவரத்தில் நடந்தவை.


சட்டம் என்ன சொல்கிறது?
3 ஆகஸ்ட் 2018 சட்டம் படி:

பாலியல்,பாலின அவமதிப்புகள் (Outrage sexiste ou sexuel) என்பது

ஒருவரின் கண்ணியத்தை குலைக்கும்,
அல்லது அவரை பயமுறுத்தும், அவமானப்படுத்தும், விரோதமான சூழ்நிலைக்கு ஆளாக்கும்  
பாலின/பாலியல் சார்ந்த கருத்து அல்லது நடத்தை.

1 ஏப்ரல் 2023 முதல்:
கடுமையான பாலியல்,பாலின அவமதிப்புகள் குற்றம் ஆக கருதப்படுகிறது

தண்டனை: 3,750 € அபராதம்

கூடுதல் தண்டனைகள்:

குடியுரிமை பயிற்சி (stage de citoyenneté)

எழுத்துரு விளம்பரங்கள்