Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

15 சித்திரை 2026 புதன் 17:25 | பார்வைகள் : 1657


உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதன்படி, இன்று (15) முற்பகல் கொழும்பு செட்டியார்த் தெரு தங்க விற்பனை நிலவரப்படி,

22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 369,900 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கடந்த 11ஆம் திகதி இதன் விலை 366,200 ரூபாவாகக் காணப்பட்டது.

அதேநேரம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை கடந்த சனிக்கிழமை 398,000 ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், இன்று 402,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்த் தெரு தங்கச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.