Paristamil Navigation Paristamil advert login

கரடியும் நரியும்

கரடியும் நரியும்

4 பங்குனி 2023 சனி 10:59 | பார்வைகள் : 10038


கரடி ஒரு நாள் பெருமையாகச் சொல்லியதாவது: மனிதர் சவத்தின்மீது எனக்கு மரியாதை உண்டு,என்னவானாலும் சரி, சவத்தைத் தொட்டு அவமரியாதை செய்வது மட்டும் என்னிடம் கிடையாது. 
 
அதைக் கேட்டுக் கொண்டிருந்த நரி அடடா,என்ன மரியாதை! சவத்திடம் உள்ள அதே மரியாதையை மனிதர் உயிரோடு இருக்கும்போது நீ காட்டுவாயானால்,நீ சொல்லுவதற்கு அர்த்தமுண்டு என்று இடித்துக் கூறியது.
 
வீண்பெருமை கொள்ளக் கூடாது