Paristamil Navigation Paristamil advert login

ஆபாச வார்த்தை பேசினால் அபராதம்...!

ஆபாச வார்த்தை பேசினால் அபராதம்...!

12 சித்திரை 2026 ஞாயிறு 14:04 | பார்வைகள் : 1377


இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் பர்ஹான்பூர் மாவட்டம் போர்சர் கிராமத்தில், தரக்குறைவான வார்த்தைகளை பேசினால் ரூ.500 அபராதம் அல்லது ஒரு மணி நேரம் கட்டாய துப்புரவுப் பணி என்ற விதி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

‘வசைமொழி இல்லா கிராமத்தை’ நிறுவும் இந்த முடிவு கிராம பஞ்சாயத்தால் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறை தொடர்பான அறிவிப்பு பேனர் கிராமம் முழுவதும் கட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிராம துணைத் தலைவர் வினோத் ஷிண்டே, “குழந்தைகள், பெரியவர்கள் ஆகிய இரு தரப்பினர் மத்தியிலும் பரவலாக இழிவான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பொது நடத்தையை ஒழுங்குபடுத்தவும், தரக்குறைவான வார்த்தை பயன்பாட்டால் ஏற்படும் மோதல்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.