Paristamil Navigation Paristamil advert login

ஆப்பிள் - இண்டெல் இடையே புதிய ஒப்பந்தம்- எகிறிய பங்குகளின் விலை

ஆப்பிள் - இண்டெல் இடையே புதிய ஒப்பந்தம்- எகிறிய பங்குகளின் விலை

9 வைகாசி 2026 சனி 15:00 | பார்வைகள் : 175


ஆப்பிள் மற்றும் இண்டெல் நிறுவனம் இடையே மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம்(Apple Inc.) மற்றும் இன்டெல் நிறுவனம்(Intel Corp.) செமிகண்டக்டர் துறையில் முக்கிய மாற்றத்திற்கான பிரத்யேக முதற்கட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளனர்.

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் தகவலில், ஓராண்டு மேலாக இரு  நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற நிலையில், தற்போது  முறையான கட்டமைப்பு தொடர்பான உடன்படிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன.

ஆனால் இன்டெல் தயாரிப்புகள் எந்தெந்த ஆப்பிள் நிறுவனத்தின் எந்த பொருட்களில் இடம்பெற உள்ளது என்பதை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தக நடவடிக்கையை தொடர்ந்து பங்கு சந்தையில் பெரும் ஏற்றம் நிகழ்ந்துள்ளது.

சாம்சங் நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டு இருந்த நிலையில் இண்டெல் உடனான பேச்சுவார்த்தை உறுதியாகியுள்ளது.

இன்டெல் - ஆப்பிள் ஒப்பந்தம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் முதலீட்டாளர் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதால் பங்குகளில் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

இன்டெல்லின் பங்கு விலை $129.64 என இருந்த நிலையில் +18.26% ஆக அதிகரித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை $292.00 என இருந்த நிலையில் +1.59% அதிகரித்துள்ளது.