Paristamil Navigation Paristamil advert login

RN ஊடகப் பயிற்சி விவகாரம்-: மரின் லூப்பன் குற்றச்சாட்டு!

RN ஊடகப் பயிற்சி விவகாரம்-: மரின் லூப்பன் குற்றச்சாட்டு!

8 வைகாசி 2026 வெள்ளி 13:01 | பார்வைகள் : 194


8 மே வெள்ளிக்கிழமை, ஐரோப்பிய வழக்கறிஞர் அலுவலகம் (Parquet européen) 2022 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கான ஊடகப் பயிற்சிகள் தொடர்பாக
விசாரணை தொடங்கியதை மரின் லூப்பன் கடுமையாக விமர்சித்தார்.

அவர் இதை :

“சூழ்ச்சி”
“ஜோர்தான் பார்தெல்லாவை அழுக்குப்படுத்தும் முயற்சி”

என்று கண்டித்துள்ளார்.

இந்த விசாரணை,

Le Canard enchaîné வெளியிட்ட கட்டுரை

பின்னர் ஊழல் எதிர்ப்பு அணியான AC!! Anti‑Corruption டிசம்பர் தொடக்கத்தில் ஐரோப்பிய வழக்கறிஞர் அலுவலகம் PNF (Parquet national financier)க்கு அளித்த புகார்

இவற்றின் பின்னணியில் ஆரம்பமாகியது.

ஐரோப்பிய நிதியால் வழங்கப்பட்ட ஊடகப் பயிற்சிகள், உண்மையில் 2022 ஜனாதிபதி தேர்தலில், மரின் லூப்பனின் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனும் குற்றச்சாட்டு.

ஊடகத்துக்கு அளித்த செவ்வியில்மரின் லூப்பன்:“இது இயல்பான விசாரணை, ஆனால் நோக்கம் அரசியல்” எனத் தெரிவித்திருந்தார்.

AC!! Anti‑Corruption அமைப்பு “அதிகப்படியான குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகள்” செய்கிறது

ஐரோப்பிய வழக்கறிஞரின் விசாரணை “முழுமையாக இயல்பானது”

ஆனால் இதன் நோக்கம் RN மற்றும் குறிப்பாக ஜோர்தான் பார்தெல்லாவை குறிவைப்பது எனத் தெரிவித்த மரின் லூப்பன் மேலும்,

“எங்கள் கட்சி அனைத்து ஆவணங்களையும் வழங்கத் தயாராக உள்ளது.
இது RN‑ஐ, குறிப்பாக ஜோர்தான் பார்தெல்லாவை அழுக்குப்படுத்தும் பெரிய முயற்சி.”

அவர் பார்தெல்லாவின் பிரபலத்தையும் குறிப்பிட்டார்.

3. 2027 தேர்தல் மற்றும் பிற நீதிமன்ற விவகாரங்களுடன் தொடர்பு?

ஜூலை 7 அன்று பரிஸ் மேல் நீதிமன்றம், மரின் லூப்பன் 2027 ஜனாதிபதி தேர்தலுக்கு தகுதியற்றவரா?  என்பதை தீர்மானிக்க உள்ளது.