ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்
7 வைகாசி 2026 வியாழன் 11:46 | பார்வைகள் : 157
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்து வரும் போரின் சூழலில், மேலும் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.
புதன்கிழமையன்று 6 மே 2026, அமெரிக்க இராணுவம் ஈரானின் எண்ணெய் கப்பல் ஒன்றை தாக்கியுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் எண்ணெய் கப்பல் ஓமன் வளைகுடாவில் அமெரிக்கா முற்றுகையிட்டுள்ள பகுதியில் எல்லையை மீற முயன்றபோது, அமெரிக்க போர்விமானம் கப்பலின் rudder பகுதியை சுட்டு சேதப்படுத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை (U.S. Central Command) தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஈரானை அழுத்தம் கொடுத்து போருக்கு முடிவுகாணும் ஒப்பந்தத்தை ஏற்கச் செய்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
“இந்த ஒப்பந்தத்தை ஈரான் ஏற்றுக்கொண்டால், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கும். போருக்கு விரைவில் முடிவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசு, அமெரிக்காவின் புதிய முன்மொழிவுகளை ஆய்வு செய்து வருவதாக அறிவித்துள்ளது.
ஆனால், இந்த தாக்குதல், இரு நாடுகளுக்கிடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
உலகளாவிய எரிசக்தி சந்தைகளில், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் போக்குவரத்து மிக முக்கியமானது. அதனால், இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த தாக்குதல், போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் புதிய சிக்கல்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. உலக நாடுகள், இந்த மோதல் விரைவில் முடிவடைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan