Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

சனல் 4 காணொளியால் ஆபத்து - பிள்ளையான் தகவல்

சனல் 4 காணொளியால் ஆபத்து - பிள்ளையான் தகவல்

7 புரட்டாசி 2023 வியாழன் 02:36 | பார்வைகள் : 10511


கடந்த காலங்களிலும் சனல் 4 தனது காணொளிகள் மூலம் இலங்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

தம்மீதான குற்றச்சாட்டுக்கள் கிழக்கில் தமது கட்சியின் இருப்பை அழிக்க சில தரப்பினரின் முயற்சியாகக் கருதப்படலாம் எனவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழ் மக்களை தொடர்ந்து கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும்  விசாரணை செய்வதற்கு சர்வதேச உதவியை கோரியுள்ளார்.

முழுமையான மற்றும் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு 2019 இன் சோகமான நிகழ்வுகளை ஆராய்ந்த ஆவணப்படத்திற்கு பதிலளிக்கும் விதமாக, கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் இலங்கை குடிமக்கள் உண்மையும் நீதியும் வெற்றிபெற ஆர்வமாக உள்ளதாகவம் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

எனினும் பிள்ளையான், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் குண்டுதாரிகளுக்கும் தனக்குமிடையில் எந்த தொடர்பும் இல்லை என மறுத்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்