Paristamil Navigation Paristamil advert login

தவறாக நிறுத்தப்பட்ட ஓய்வூதியம்: சராசரியாக ஒருவருக்கு 8,600 யூரோக்கள் வரை திருப்பி செலுத்த நடவடிக்கை!!

தவறாக நிறுத்தப்பட்ட ஓய்வூதியம்: சராசரியாக ஒருவருக்கு 8,600 யூரோக்கள் வரை திருப்பி செலுத்த நடவடிக்கை!!

5 வைகாசி 2026 செவ்வாய் 21:21 | பார்வைகள் : 1174


Agirc-Arrco சுமார் 100,000 ஓய்வூதியர்களின் கோப்புகளை மறுபரிசீலனை செய்து வருகிறது. இதில் சிலரின் ஓய்வூதியம் தவறாக நிறுத்தப்பட்டிருக்கலாம். பிழைகளை சரிசெய்து, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகைகளை வழங்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

இந்த பிரச்சினை, Agirc-Arrco மற்றும் DGFIP தரவுத்தளங்களை ஒப்பிட்டபோது கண்டறியப்பட்டது. சுமார் 1.4 கோடி ஓய்வூதியர்களில், 100,000 கோப்புகளில் தகவல் முரண்பாடுகள் இருப்பதாக தெரியவந்தது. சிலர் 110 வயதுக்கு மேல் இருப்பதாக பதிவாகியிருந்தனர் அல்லது அவர்கள் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தவில்லை.

இரண்டு முக்கியக் குழுக்கள் பாதிக்கப்பட்டுள்ளன:

  1. மறைந்தவர்களின் துணைவர்களாக இருந்து reversion ஓய்வூதியம் பெறுவோர் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்த பலமுறை அனுப்பப்பட்ட கடிதங்கள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்காதவர்கள் (மீண்டும் திருமணம் செய்தால் இந்த ஓய்வூதியத்திற்கு உரிமை இல்லை).
  2. வெளிநாடுகளில் வசிக்கும் ஓய்வூதியர்கள் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை ஆண்டுதோறும் அனுப்பாதவர்கள்.

தேவையான ஆவணங்கள் அல்லது உறுதிப்படுத்தல்கள் வழங்கப்படாததால், அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. மொத்தத்தில், சுமார் 847 மில்லியன் யூரோ அளவுக்கு 100,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம், ஒருவருக்கு சராசரியாக 8,600 யூரோக்கள் கிடைக்கலாம். 

பல கோப்புகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுள்ளன, மேலும் இந்த நடவடிக்கை பெரும்பாலும் புகார் அளிக்காத ஓய்வூதியர்களுக்காக Agirc-Arrco தானாக மேற்கொண்டு வருகிறது.