யாழில் வீடு புகுந்து இளைஞர் மீது தாக்குதல் - உடமைகள் சேதம் - சந்தேக நபர்கள் குறித்து விசாரணை
5 வைகாசி 2026 செவ்வாய் 17:00 | பார்வைகள் : 424
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் வீடு புகுந்த இருவர் உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளையில் மதுபோதையில் இருந்த இருவர் அத்துமீறி நுழைந்து மிக மோசமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த இளைஞரை மோசமாக தாக்கியதில், அவர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பிறகு அவர்கள் வீட்டின் உடமைகளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அதனையடுத்து, பாதிக்கப்பட்ட நபரால் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ள மருதங்கேணி பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan