Paristamil Navigation Paristamil advert login

போர் நிறுத்தத்தில் தோல்வியா..? - ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்

போர் நிறுத்தத்தில் தோல்வியா..? - ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்

1 வைகாசி 2026 வெள்ளி 05:43 | பார்வைகள் : 140


ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தொடங்கிய தாக்குதல்கள் சுமார் 40 நாட்கள் நீடித்த நிலையில், கடந்த 8 ஆம் திகதி இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் நிலைமை சற்றே அமைதியானதாயினும், நிரந்தர சமாதானம் எட்டப்படவில்லை. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான நிரந்தர போர் நிறுத்தத்திற்கான தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் 21 மணிநேரம் நடைபெற்ற போதிலும், எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிடும் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் தொடரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனால் மேற்காசியப் பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும், இல்லையெனில் அதன் உள்கட்டமைப்பு, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

மற்றுபுறம், ஈரான், ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்கள் தங்களது முன் அனுமதியைப் பெற வேண்டும் என்றும், பாதுகாப்பு கட்டணம் செலுத்தும் கப்பல்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அமெரிக்கா தனது முற்றுகை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தால் பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

பாகிஸ்தன், ஈரானுக்கு ஆறு தரை வழிகளைத் திறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் தனது வர்த்தகத்தை எளிதாக மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் பொருளாதார அழுத்த முயற்சிகளை பாதிக்கக்கூடும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், பாகிஸ்தான் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனால், மேற்காசியப் பிராந்தியத்தில் அரசியல் மற்றும் பொருளாதார பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.