மே மாத தொடக்கம் முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள் !!
30 சித்திரை 2026 வியாழன் 07:45 | பார்வைகள் : 4786
மே மாதம் 1ம் திகதி தொடக்கம் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் தினத்துடன் இணைந்து இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் நிலையில், எரிவாயு விலை உயர்வு, மாணவர்களுக்கு 1 யூரோ உணவுத் திட்ட விரிவு, குடியிருப்பு அனுமதிக்கான வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பொதுமக்களின் நாளாந்த வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிவாயு விலை உயர்வு :
முதன்மையாக, எரிவாயு விலை சராசரியாக 15.4% உயர்ந்துள்ளது. இதனால் மாதத்திற்கு சுமார் 6.19 யூரோக்கள் வரை கூடுதல் செலவு ஏற்படும். குறிப்பாக, அரசு நிர்ணயித்த குறியீட்டு விலையை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தங்களில் உள்ள குடும்பங்களே இந்த உயர்வால் பாதிக்கப்படுவர். நிலையான விலை ஒப்பந்தங்களில் உள்ளவர்களுக்கு உடனடி மாற்றம் ஏற்படாது.
1 யூரோ உணவுத் திட்டம் விரிவாக்கம்:
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 1 யூரோ உணவுத் திட்டம், இதுவரை உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு மட்டுமே இருந்த நிலையில், மே 4 முதல் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. மாணவர் அட்டை வைத்திருப்பது மட்டுமே போதுமானதாக இருக்கும்.
எரிபொருள் உதவி :
அதிக பயணம் செய்பவர்களுக்கு நிவாரணம் எரிபொருள் விலை உயர்வை சமாளிக்க, அரசு புதிய நிவாரணத் திட்டத்தை அறிவித்துள்ளது. குறிப்பாக, தினசரி அதிக தூரம் பயணம் செய்யும் தொழிலாளர்களுக்கு இது உதவும். ஒரு லிட்டருக்கு சராசரியாக 20 சென்ட் தள்ளுபடி வழங்கப்படும் நிலையில், ஒருவருக்கு அதிகபட்சம் 50 யூரோக்கள் வரை வழங்கப்படும்.
கைப்பேசி பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு கடும் நடவடிக்கை:
சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்தினால் உடனடி ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்படும் கடுமையான நடவடிக்கை சில பிராந்தியங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது முன்பே சில பகுதிகளில் நடைமுறையில் இருந்த நிலையில், தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
குடியிருப்பு அனுமதி கட்டணம் உயர்வு:
வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக மற்றும் நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கான வரி தொகை 225 யூரோவிலிருந்து 350 யூரோக்களாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், மாணவர்கள், காலநிலை தொழிலாளர்கள் போன்ற சில பிரிவுகளுக்கு இந்த கட்டணம் 150 யூரோக்களாக குறைக்கப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல் – காலக்கெடு அறிவிப்பு:
2025ஆம் ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை இணையதள ஊடாக சமர்ப்பிக்கும் நடைமுறை ஏப்ரல் 9 முதல் தொடங்கியுள்ளது. பிராந்தியங்களுக்கு ஏற்ப கடைசி தேதிகள் மாறுபடும். சில பகுதிகளுக்கு மே 21, மற்ற பகுதிகளுக்கு மே 28 மற்றும் ஜூன் 4 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. காகித வடிவில் சமர்ப்பிப்பவர்கள் மே 19க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan