நடிகர் விஜய்யிடம் சிபிஐ நடத்திய விசாரணை நிறைவு
16 பங்குனி 2026 திங்கள் 05:04 | பார்வைகள் : 906
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக, மார்ச் 15 3வது முறையாக டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் ஆஜரானார். அவரிடம் பல்வேறு வீடியோ ஆதாரங்களை காண்பித்து சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 7 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
கரூரில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில், 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு, சென்னையில் இருந்து டில்லிக்கு தனி விமானம் மூலம் வந்தார். அவருடன் த.வெ.க., நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ஜெகதீஷ் உள்ளிட்ட, ஏழு பேர் வந்தனர்.
வீடியோவை காண்பித்து விசாரணை
இந்நிலையில் மார்ச் 15 காலை 10.20 மணியளவில் டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தயார் செய்து வைத்து இருந்த பல்வேறு கேள்விகளை எழுப்பினர். கரூரில் விசாரணை நடத்திய நபர்களிடம் பெறப்பட்ட வீடியோ வாக்குமூலம், கைப்பற்றப்பட்ட வீடியோ ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விஜய்யிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அவற்றுக்கு விஜய் பதில் அளித்தார். தொடர்ந்து, 8 மணி நேரமாக நடைபெற்ற விசாரணை இன்று மாலை நிறைவு பெற்றது.
கடந்த முறை விசாரணையை போலவே சிபிஐ அலுவலக போர்டிகோ வரை காரில் விஜய் சென்றார். அப்பகுதியில் விஜயை புகைப்படம் எடுப்பற்கு செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 9:30 மணி முதல், 7 மணி நேரத்துக்கும் மேலாக (உணவு இடைவேளை போக) நடந்த விசாரணை முடிந்து மாலை 6:00 மணிக்கு விஜய் வெளியே வந்தார். திரண்டிருந்த செய்தியாளர்கள், பொதுமக்களை பார்த்து திறந்த காரில் நின்றபடி, சிரித்துக் கொண்டே கை அசைத்துச் சென்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan