ஈரானின் 40வது அலை தாக்குதல் - அதிர்ந்த இஸ்ரேல்
12 பங்குனி 2026 வியாழன் 11:21 | பார்வைகள் : 269
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ் 4 (Operation True Promise 4) நடவடிக்கையின் 40வது அலை தாக்குதலை நடத்தியுள்ளது.
இது ஹிஸ்புல்லா உடன் இணைந்து நடத்தப்பட்ட பெரிய அளவிலான பதிலடி தாக்குதலாகும்.
IRGC வெளியிட்ட அறிக்கையின்படி,
இந்த 40வது அலை 5 மணி நேரம் நீடித்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் Qadr, Emad, Kheibar Shekan, Fattah உள்ளிட்ட பல்வேறு வகை பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் முக்கிய இலக்குகளாக இஸ்ரேலில் டெல் அவிவ், ஹைஃபா, அல்-குட்ஸ், ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகள் இஸ்ரேலில் 50க்கும் மேற்பட்ட இலக்குகள் (IRGC கூற்றுப்படி) அமெரிக்காவின் பிராந்திய இராணுவ தளங்கள், உதாரணமாக Al-Azraq (ஜோர்தான்) மற்றும் Al-Kharj (சவுதி அரேபியா) தளங்கள் இந்த நடவடிக்கை "Ya Amir al-Mu’minin" (அமீர் அல்-முஃமினீன் - அலி இப்னு அபி தாலிப் அவர்களுக்கு அஞ்சலி) என்ற குறியீட்டு பெயரில் நடத்தப்பட்டுள்ளது.
IRGC அறிக்கையில் மேலும், "ஈரான் மீதான போர் நிறுத்தப்படும் வரை தாக்குதல்கள் தொடரும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan