Paristamil Navigation Paristamil advert login

ஈரானிய கால்பந்து வீராங்கனைகள் 7 பேருக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம்

ஈரானிய கால்பந்து வீராங்கனைகள் 7 பேருக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம்

11 பங்குனி 2026 புதன் 13:04 | பார்வைகள் : 1514


அவுஸ்திரேலிய அரசு, ஈரான் மகளிர் கால்பந்து அணியின் 7 உறுப்பினர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளது.

அணியில் சிலர் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்பட்டதால், அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் மனிதாபிமான விசா கோரியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அனைத்து வீராங்கனைகளுக்கும் தனிப்படை முறையில் விசா வாய்ப்பு வழங்கப்பட்டது. எந்த அழுத்தமும் இல்லாமல் அவர்கள் தங்கள் முடிவை எடுத்ததாக, அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, 5 வீராங்கனைகள் அடைக்கலம் பெற்ற நிலையில், மேலும் 2 பேர் மற்றும் ஒரு ஆதரவு குழு உறுப்பினருக்கும் விசா வழங்கப்பட்டது.

ஆனால், ஒரு வீராங்கனை தனது முடிவை மாற்றி, ஈரான் தூதரகத்தை தொடர்பு கொள்ளும் நிலை ஏற்பட்டதாகவும், இதனால் அணியின் இருப்பிடமும் வெளிப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனால் மீதமுள்ள வீராங்கனைகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில், இந்த ஈரானிய மகளிர் அணியினர் தேசிய கீதம் பாட மறுத்துள்ளனர்.

ஈரான் அரசு அவர்களை துரோகிகள் என குற்றம் சாட்டியது. இதனால் அவர்கள் தாய் நாட்டிற்கு திரும்பினால் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது.

இதனையடுத்து, அவுஸ்திரேலிய அரசின் இந்த அடைக்கல நடவடிக்கை நேர்ந்தது.

அவுஸ்திரியாவில் இருந்து புறப்பட்ட வீராங்கனைகள் மலேசியாவிற்கு சென்றுள்ளனர். இதற்கிடையில், ஈரான் அரசு "அவர்கள் அமைதியாக நாடு திரும்பலாம்" என அறிவித்துள்ளது.

ஆனால், அவுஸ்திரேலியாவில் உள்ள ஈரானிய வம்சாவளியினர், வீராங்கனைகள் தாய் நாட்டிற்கு திரும்பினால் ஆபத்து ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.