Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் டிக்டோக் தொடர்ந்து செயல்பட அனுமதி

கனடாவில் டிக்டோக் தொடர்ந்து செயல்பட அனுமதி

10 பங்குனி 2026 செவ்வாய் 05:07 | பார்வைகள் : 1017


கனடாவில் டிக்டோக் தொடர்ந்து செயல்பட அனுமதிப்பதாக கனேடிய அரசாங்கம் திங்களன்று தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு மதிப்பாய்வை முடித்த பிறகு தொழில்நுட்ப தளத்தின் முதலீட்டைத் தொடரவும் அனுமதிக்க உள்ளது.

இந்த ஒப்புதல் டிக்டோக் கனடாவால் வழங்கப்படும் புதிய சட்டப்பூர்வ ஒப்பந்தங்களுக்கு உட்பட்டது என்று கனேடிய தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு கனேடிய வேலை வாய்ப்புளைப் பாதுகாக்கும், மேலும் டிக்டோக் கனடா கனடாவில் ஒரு உண்மையான இருப்பைப் பேணுவதை உறுதி செய்யும் என்று கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 2024 இல், தேசிய பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, டிக்டோக்கின் வணிகத்தை கலைக்க கனடாவின் தொழில்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

ஆனால் ஜனவரி மாதம் கனடாவின் ஃபெடரல் நீதிமன்றம் அரசாங்க உத்தரவை ரத்து செய்து, டிக்டோக் செயலியை தொடர்ந்து செயல்பட அனுமதித்தது, மேலும் வழக்கை மறுபரிசீலனை செய்ய அரசாங்கத்திடம் கூறியது.

டிக்டாக் நிறுவனமும் இந்த ஒப்பந்தங்களை ஒப்புக்கொண்டதுடன், திங்களன்று கனடா அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும், அது அதன் உள்ளூர் செயல்பாடுகளை தொடர்ந்து நிலைநிறுத்தும் என்றும் கூறியது.