மேற்காசிய நிலவரம் என்ன? ராஜ்யசபாவில் விளக்கிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
9 பங்குனி 2026 திங்கள் 09:09 | பார்வைகள் : 208
மேற்காசிய பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு, இன்று (மார்ச் 09) காலை 11 மணிக்கு தொடங்கியது. லோக்சபாவில் மறைந்த எம்பிக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஒத்திவைக்கப்பட்டது.
கூட்டத்தொடரின் 2ம் கட்ட அமர்வு ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கிறது. ராஜ்யசபாவில் டி-20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணியினருக்கு அவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.
ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் தவித்து வரும் இந்தியர்கள் நிலை குறித்து விவாதிக்க வேண்டும் என காங்., ராஜ்யசபா தலைவர் கார்கே கேள்வி எழுப்பினார். பின்னர் மேற்காசிய நிலவரம் குறித்து ஜெய்சங்கர் அளித்த விளக்கம்:
* மேற்காசிய பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும். அதைத்தான் இந்திய சார்பில் வலியுறுத்தி உள்ளோம்.
* மேற்காசிய நிலவரம் குறித்து பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார். பதட்டங்களை தணிக்கவும், அடிப்படை பிரச்னைகளையும் தீர்க்கவும் வலியுறுத்தி இருக்கிறோம்.
* கச்சா எண்ணெய் விலை உயர்வை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
* ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தொடர்ந்து தூதரகம் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. அங்கு வசிக்கும் இந்தியர்களின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
* சிறப்பு விமானங்கள் மூலம் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீட்டு வரப்படுகின்றனர்.
* ஈரான் - இஸ்ரேல் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா விரும்புகிறது. போர் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக குழு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.
* இது வெறும் ஈரான் -இஸ்ரேல், அமெரிக்க போர் மட்டும் கிடையாது அந்த பிராந்தியத்தை சுற்றியுள்ள பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
* எரிபொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் வராமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளோம்.
* மேற்காசிய நிலைமை கவலைக்குரியது. அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பு முன்னுரிமை அளிக்கவும் வலியுறுத்தி உள்ளோம்.
* அனைத்து நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டியது அவசியமாகும்.
* வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்திய குடிமக்கள் வசித்து வேலை செய்கிறார்கள். ஈரானிலும், படிப்பு அல்லது வேலைவாய்ப்புக்காக சில ஆயிரம் இந்தியர்கள் அங்கு உள்ளனர்.
* அங்கு இந்தியர்கள் எதிர்கொள்ளும் சிமங்களை அரசு கவனித்து வருகிறது. இந்த பிரச்னையைத் தீர்க்க உரிய நடவடிக்கைகளை எடுக்க அனைத்து சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan