Paristamil Navigation Paristamil advert login

ஈரானில் உள்ள பல எரிபொருள் கட்டமைப்புகள் மீது தாக்குதல்

ஈரானில் உள்ள பல எரிபொருள் கட்டமைப்புகள் மீது தாக்குதல்

8 பங்குனி 2026 ஞாயிறு 06:06 | பார்வைகள் : 216


ஈரானில் உள்ள பல எரிபொருள் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள பல எரிசக்தி கட்டமைப்புகள் மீது இஸ்ரேலிய படைகள் துல்லிய வான்வழித் தாக்குதல் நடத்தி இருப்பதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் தாக்குதலுக்கு உள்ளான இந்த குறிப்பிட்ட இடங்கள் ஈரானின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான முக்கிய மையங்களாக செயல்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் இந்த எரிசக்தி தொட்டிகளை விரிவான ராணுவ கட்டமைப்பை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் பயன்படுத்தி வருவதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை குற்றம் சாட்டியுள்ளது.

ஈரானின் தளவாட விநியோகத்தை கட்டுப்படுத்த முடியும், உள்கட்டமைப்பு தயார் நிலையை முடக்க முடியும் மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான உடனடி மற்றும் நீண்ட கால அச்சுறுத்தல்களை அகற்ற முடியும் ஆகியவை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரின் இந்த தாக்குதலின் நோக்கமாக உள்ளது.

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் பற்றி எரியும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026