Paristamil Navigation Paristamil advert login

போர்க்களத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு - பிரான்ஸ் அனுப்பும் முக்கிய பொருட்கள்!!

போர்க்களத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு - பிரான்ஸ் அனுப்பும் முக்கிய பொருட்கள்!!

6 பங்குனி 2026 வெள்ளி 07:00 | பார்வைகள் : 2328


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவை தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு “போரை விஸ்தரிக்கவேண்டாம். லெபனான் மீது தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம்” என வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, பொதுமக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பெய்ரூட்டின் தெற்கு புறநகர் நோக்கி தப்பி ஓடிவருகின்றனர்.

இந்த தாக்குதல்களுக்கு இடையே சிக்கிக்கொண்டு, உடமைகளை இழந்த பொதுமக்களுக்கு ஆதரவுக் கரத்தினை பிரான்ஸ் நீட்டியுள்ளது. அங்கு அகதிகளாகச் சென்ற பொதுமக்களுக்கு தேவையான முதலுதவி பொருட்கள், உணவுகளை உடனடியாக விநியோகிக்க பிரான்ஸ் தயாராகி வருகிறது என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டார்.

***
யுத்தம் ஆரம்பித்து இன்று வெள்ளிக்கிழமையுடன் ஏழு நாட்கள் ஆகின்றன. கடந்த ஆறு நாட்களில் ஈரானின் 30 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா உரிமைகோரியுள்ளது.