Paristamil Navigation Paristamil advert login

வன்முறை, திருட்டு குற்றச்சாட்டுகள்: கைது செய்யப்பட்ட 11 காவல்துறை அதிகாரிகள்!!

வன்முறை, திருட்டு குற்றச்சாட்டுகள்: கைது செய்யப்பட்ட 11 காவல்துறை அதிகாரிகள்!!

10 சித்திரை 2026 வெள்ளி 07:48 | பார்வைகள் : 524


Val-de-Marne மாவட்டத்திலுள்ள Villeneuve-Saint-Georges நகரில் அரிதான சம்பவமாக, 11 நகராட்சி காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பணியில் இருந்தபோதே தேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வன்முறை, திருட்டு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பாக இவர்களுக்கு எதிரான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஏப்ரல் மாதம் 8ம் திகதி புதன்கிழமை பிற்பகலில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில், காவல்துறை அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதுடன், பல அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குறிப்பாக, ஒரு நபர் மீது மின்சார அதிர்ச்சி ஆயுதம் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபருக்கு 15 நாட்கள் மருத்துவ ஓய்வு பரிந்துரைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன், போலி ஆவணங்கள், வீடு புகுந்து அத்துமீறல் மற்றும் சேதப்படுத்தல் போன்ற குற்றங்களும் விசாரணையில் உள்ளன.

இதற்கிடையில், நகர மக்களிடையே காவல்துறையின் செயல்பாடு குறித்து கலவையான கருத்துக்கள் நிலவுகின்றன. பாதுகாப்பு மேம்பட்டதாக சிலர் பாராட்டினாலும், அதிகாரிகள் மிகுந்த கடுமையுடன் நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த நகர மேயர் Kristell Niasme , தனது காவல்துறையினர் மீது நம்பிக்கை இருப்பதாகவும், விசாரணை முடிவுகளை அடிப்படையாக கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.