பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதலில் 5 பேர் பலி
4 சித்திரை 2026 சனி 08:34 | பார்வைகள் : 1214
பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதலில் 5 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு பாகிஸ்தானில் காவல் நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டு தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 13 பேர் காயமடைந்தனர் என்று வியாழக்கிழமை இரவு காவல் துறை தெரிவித்தது.
கைபர் பக்துன்க்வாவின் பன்னு மாவட்டத்தில் உள்ள டோமெல் வட்டத்தில் காவல் நிலையத்தின் பின்புறத்தில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் மூலம் இந்த தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
இதனால் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது என்று காவல் துறை கூறியது. பல மைல்கள் தொலைவு வரை கேட்கப்பட்ட இந்த வெடிப்பின் தீவிரம், அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.
இது அப்பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை. வெடிவிபத்தில் காயமடைந்த 13 பேரில் நான்கு காவல் துறைப் பணியாளர்களும் அடங்குவர்.
அதிகாரிகள் நிலைமையைத் தொடர்ந்து மதிப்பிட்டு வருவதால், அவசரகால மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan