Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவில் புதிய God Mode மால்வேர் அச்சுறுத்தல்

 இந்தியாவில் புதிய God Mode மால்வேர் அச்சுறுத்தல்

2 சித்திரை 2026 வியாழன் 13:00 | பார்வைகள் : 159


இந்தியாவில் புதிய சைபர் அச்சுறுத்தல் குறித்து தேசிய சைபர் குற்றப்பிரிவு (NCTAU) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

“God Mode” எனப்படும் இந்த Android மால்வேர், பயனர்களின் கைப்பேசிகளை முழுமையாகக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மால்வேர், நம்பகமானதாகத் தோன்றும் செயலிகள் (பேங்கிங் ஆப்ஸ், யூட்டிலிட்டி சேவைகள், சிஸ்டம் அப்டேட் போன்றவை) மூலம் பரவுகிறது.

பயனர்கள் SMS அல்லது WhatsApp வழியாக வரும் APK கோப்புகளை பதிவிறக்கம் செய்யும்போது, Accessibility அனுமதி வழங்கும் தருணத்தில், ஹேக்கர்கள் கைப்பேசியை முழுமையாகக் கைப்பற்றுகின்றனர்.

OTP மற்றும் SMS-களைப் பிடித்து வங்கிக் கணக்குகளைத் தாக்குதல்

தொடர்புகள் மற்றும் தகவல்களைப் பயன்படுத்தி மேலும் மோசடி பரப்புதல்

போலியான திரைகள் மூலம் பேங்கிங் செயலிகளை ஏமாற்றுதல்

கேமரா, அழைப்புகள், Call Forwarding போன்றவற்றை அனுமதி இல்லாமல் இயக்குதல்

இந்த தாக்குதல், பயனர்களின் தனியுரிமை மற்றும் நிதி பாதுகாப்புக்கு மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், “அறியப்படாத APK கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம், Accessibility அனுமதிகளை கவனமாக வழங்க வேண்டும்” என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

God Mode மால்வேர் இந்தியாவில் கைப்பேசி பயனர்களுக்கு புதிய சவாலாக உருவாகி, சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்துகிறது.