Paristamil Navigation Paristamil advert login

நாளை பாடசாலைகளில் வேலை நிறுத்தம்!!

நாளை பாடசாலைகளில் வேலை நிறுத்தம்!!

30 பங்குனி 2026 திங்கள் 21:39 | பார்வைகள் : 690


மார்ச் 31 அன்று நடைபெறவுள்ள ஆசிரியர் வேலைநிறுத்தம், வகுப்புகள் மூடப்படுதல் மற்றும் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நீக்கப்படுதல் ஆகியவற்றுக்கு எதிரானதாகும். பல பாடசாலைகளில் முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்பட்டதால், பெற்றோர்கள் அவசரமாக குழந்தைகள் பராமரிப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சமீப நாட்களாக நாடு முழுவதும் இந்த எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. சில கல்லூரிகளில் மாணவர்கள் வராமல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களும் பெற்றோர்களும் வகுப்புகள் மூடப்படுவதற்கு எதிராக இணைந்து செயல்படுகின்றனர்.

பாட நேர ஒதுக்கீடு குறைவதால், வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது. ஏற்கனவே அதிக மாணவர்கள் உள்ள வகுப்புகள் மேலும் சிரமத்தை உருவாக்கும் என ஆசிரியர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், சில கல்வி நிறுவனங்கள் கூடுதல் வளங்கள் பெறுவதற்காக ஒன்றிணைந்து போராடுகின்றன. இந்த நிலையில், சுமார் 30% ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும், 15% பாடசாலைகள் முழுமையாக மூடப்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.