Paristamil Navigation Paristamil advert login

கட்டாரில் ஹெலிகொப்டர் விபத்து - அறுவர் பலி - ஒருவர் மாயம்!

கட்டாரில் ஹெலிகொப்டர் விபத்து - அறுவர் பலி - ஒருவர் மாயம்!

22 பங்குனி 2026 ஞாயிறு 12:34 | பார்வைகள் : 192


கட்டாரின் கடல் பகுதியில் இடம்பெற்ற  ஹெலிகொப்டர் விபத்தொன்றில் சிக்கி ஆறுபேர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதாக அந்தநாட்டு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த  ஹெலிகொப்டரில் ஏழு பேர் பயணித்துள்ளதாக கட்டார் உள்நாட்டு அமைச்சு தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் போது, உயிரிழந்த அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஹெலிகொப்டரில் பயணித்த மற்றைய நபரைத் தேடி விசேட குழுக்களினால் கடல் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விபத்து குறித்த விரிவான விசாரணைகளை அந்தநாட்டு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.