Paristamil Navigation Paristamil advert login

30 நாட்களுக்கு ஈரான் மீதான தடையை நீக்கிய அமெரிக்கா

 30 நாட்களுக்கு ஈரான் மீதான தடையை நீக்கிய அமெரிக்கா

21 பங்குனி 2026 சனி 07:24 | பார்வைகள் : 1672


உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடும் அழுத்தங்களைக் குறைக்கும் நோக்கில், ஈரான் மீதான எண்ணெய் விற்பனைத் தடையை அமெரிக்கா 30 நாட்களுக்குத் தற்காலிகமாக நீக்கியுள்ளது.

அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் இது குறித்த அறிவிப்பை நேற்று (20) வெளியிட்டார்.

அமெரிக்க - இஸ்ரேலிய போர் பதற்றங்களுக்கு மத்தியில், எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்க இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மார்ச் 20 முதல் ஏப்ரல் 19 வரை கப்பல்களில் ஏற்றப்படும் ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய 'பொதுவான உரிமம்' வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெசென்ட் தனது 'X' தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

சுமார் 140 மில்லியன் பீப்பாய் ஈரானிய எண்ணெயை உலக சந்தைக்குக் கொண்டு வருவதன் மூலம், தற்காலிக எரிசக்தி தட்டுப்பாட்டை அமெரிக்கா சீர்செய்யும். இது உலகளாவிய விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்த உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது

கடந்த இரண்டு வாரங்களில் ரஷ்யாவைத் தொடர்ந்து, ஈரான் மீதும் அமெரிக்கா தனது தடைகளைத் தளர்த்துவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.