ஈரான் மீது தாக்குதலை நிறுத்த நெதன்யாகு தீர்மானம்!
20 பங்குனி 2026 வெள்ளி 14:45 | பார்வைகள் : 248
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானின் எரிவாயு வயல்கள் (Gas fields) மீதான அடுத்தக்கட்டத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நெதன்யாகு குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்ரம்பை ஈரானுடனான போருக்குள் தாம் இழுப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதன்போது நிராகரித்தார்.
மறுபுறம், ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் ஜெரூசலம் ஆகிய பகுதிகளில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானின் உட்கட்டமைப்புகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியம் , குவைத், சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் கடந்த சில மணித்தியாலங்களில் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இத்தாக்குதல்களுக்கு ஈரானே காரணம் என கை்கிய அரபு இராச்சியமும், பஹ்ரைனும் குற்றம் சுமத்தியுள்ளன. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் ஆரம்பித்தது முதல் ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,186 ஆக உயர்ந்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான 'ஹரானா' (Hrana) தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாது கத்தாரின் 'ராஸ் லப்பான்' எரிசக்தி முனையம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் எரிவாயு விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan