Paristamil Navigation Paristamil advert login

ரூ.18,000 கோடிக்கு விற்கப்பட உள்ள RCB? இறுதிக்கட்ட போட்டியில் இரு குழு

 ரூ.18,000 கோடிக்கு விற்கப்பட உள்ள RCB? இறுதிக்கட்ட போட்டியில் இரு குழு

18 பங்குனி 2026 புதன் 14:05 | பார்வைகள் : 278


RCB அணியின் விற்பனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், போட்டியில் இரு குழுக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28 ஆம் திகதி தொடங்கி நடைபெற உள்ள நிலையில், நடப்பு சாம்பியனான RCB அணியின் விற்பனையும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

RCB அணி 2025 ஐபிஎல் தொடரில் அதன் முதல் கிண்ணத்தை வென்றதும் அதன் சந்தை மதிப்பு உயர்ந்ததால், அதன் தற்போதைய உரிமையாளராக உள்ள லண்டனை சேர்ந்த Diageo நிறுவனம், அணியை விற்க முன்வந்துள்ளது.

இதனை வாங்க Serum institute நிறுவனத்தின் CEO அதார் பூனாவாலா, அதானி குழும தலைவர் கௌதம் அதானி உள்ளிட்ட பலரும் தொடக்கத்தில் ஆர்வம் காட்டினாலும் தற்போது இவர்கள் அணியை வாங்கும் முடிவில் இருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த EQT என்ற தனியார் பங்கு நிறுவனமும், ரஞ்சன் பாயின் மணிப்பால் குழுமம் தலைமையிலான குழுவும் அணியை வாங்கும் இறுதிப்போட்டியில் இணைந்துள்ளது.

அமெரிக்க தனியார் பங்கு நிறுவனமான கோல்பர்க் கிராவிஸ் ராபர்ட்ஸ் & கோ. (KKR) மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டுக் குழுவான டெமாசெக் ஆகியவை மணிப்பால் குழுமத்துடன் இணைந்து அணியை வாங்கும் முடிவில் உள்ளது.

EQT, சுமார் 2 பில்லியன் டொலருக்கு(இந்திய மதிப்பில் சுமார் ரூ.18,544 கோடி) அணியை வாங்கும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விற்பனையை மார்ச் 31 ஆம் திகதிக்குள் முடிக்க Diageo நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்போது ஏலம் இறுதி செய்யப்பட்டாலும், செயல்முறைகளை முடித்து புதிய உரிமையாளர் பொறுப்பேற்க செப்டம்பர் அல்லது அக்டோபர் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில், சஞ்சீவ் கோயங்கா தலைமையிலான RPSG குழுமம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை 850 மில்லியன் டொலருக்கு (ரூ. 7090 கோடி) வாங்கியதை விட இந்த விற்பனைத் தொகை மிகவும் அதிகமாக இருக்கும்.