இரு குழந்தைகளுக்கு நேர்ந்த துயரம்! - தாய் கைது!!
12 மாசி 2026 வியாழன் 16:17 | பார்வைகள் : 496
குளிர்சாதனப்பெட்டி ஒன்றில் இருந்து இரு குழந்தைகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அக்குழந்தைகளின் தாயார் இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் வைத்து கைது செய்யப்பட்டார்.
பிரான்சின் வடகிழக்கு பகுதியான Aillevillers-et-Lyaumont (Haute-Saône) நகரில் இச்சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள வீடொன்றில் இருந்து காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். வீட்டுக்கு விரைந்து சென்ற அவர்கள் அங்குள்ள குளிர்சாதனப்பெட்டிக்குள் இருந்து இரு குழந்தைகளின் சடலங்களை மீட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் உயிரிழந்தமைக்குரிய காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. அக்குழந்தைகளின் தாயார் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் நேற்று புதன்கிழமை Boulogne-Billancourt (Hauts-de-Seine) நகரில் ஒரு வீட்டில் மறைந்திருந்த நிலையில் பிற்பகல் 1 மணி அளவில் கைது செய்யப்பட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan