Paristamil Navigation Paristamil advert login

இறைச்சி நுகர்வை கட்டுப்படுத்த அரசு பரிந்துரை!!

இறைச்சி நுகர்வை கட்டுப்படுத்த அரசு பரிந்துரை!!

12 மாசி 2026 வியாழன் 14:48 | பார்வைகள் : 2475


அரசு பிப்ரவரி 11 அன்று தேசிய உணவு, ஊட்டச்சத்து மற்றும் காலநிலைத் திட்டத்தை வெளியிட்டது. இந்தத் திட்டம், இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி நுகர்வை "குறைக்க" அல்லது "கட்டுப்படுத்த" வேண்டும் என்று பரிந்துரைக்கிறது; அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி நுகர்வை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. 

மேலும், பழங்கள், காய்கறிகள், பருப்புகள், நட்ஸ் வகைகள் மற்றும் முழு தானியங்களின் நுகர்வை அதிகரித்து, மீன் மற்றும் பால் பொருட்களை சமநிலையுடன் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. 2030க்குள் ஆரோக்கியமானதும் குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட உணவுமுறையை உருவாக்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். 

இது காலநிலை குறித்த குடிமக்கள் மாநாட்டின் பரிந்துரைகளையும், 2021 காலநிலைச் சட்டத்தையும் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. இறைச்சி நுகர்வு குறித்து “குறைத்தல்” அல்லது “கட்டுப்படுத்தல்” என்ற சொல்லாக்கத்தைச் சுற்றி அமைச்சகங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், இந்த ஆவணத்தின் வெளியீடு பலமுறை தாமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.