பிரான்ஸ் மீது அத்துமீறிய நெத்தன்யாகு!!
11 மாசி 2026 புதன் 07:00 | பார்வைகள் : 2844
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு சர்வதேச குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது விமானம் பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ் நாடுகள் மீது பறந்துள்ளமை பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இஸ்ரேலில் இருந்து அமெரிக்காவுக்கு பறந்த நெத்தன்யாகு, மேற்குறித்த நாடுகளது வான்பரப்பை பயன்படுத்தியமை விமான ரேடார் தரவுகளில் பதிவாகியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் (ICC) போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நெத்தன்யாகுவின் விமானத்தை இந்த வான்பரப்புகளில் பறக்கவிடப்பட்டமை கண்டனத்தை தூண்டியுள்ளது.
ICC எனப்படும் இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மொத்தமாக 120 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அவற்றில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் கிரீஸ் உள்ளன. கைது வரண்ட் விடுக்கப்பட்ட நெத்தன்யாகு சர்வசாதாரணமாக வான்பரப்பை பயன்படுத்துவதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan