கண்கள் தோண்டப்பட்டு படுகொலை! - பெண்ணின் சடலம் மீட்பு!!
9 மாசி 2026 திங்கள் 15:55 | பார்வைகள் : 456
கண்கள் தோண்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Saint-Cloud (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. Rue Albert Ier வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து 50 வயதுடைய பெண் ஒருவரது சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டது. கண்கள் இரண்டும் தோண்டப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு மிக கொடூரமான நிலையில் சடலம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அப்பெண்ணின் 58 வயதுடைய கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சடலம் நிர்வாணமாக இருந்ததாகவும், அறை முழுவதும் இரத்தக்கறை படிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan