Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் இலங்கையர் ஒருவர் அதிரடியாக கைது

கனடாவில் இலங்கையர் ஒருவர் அதிரடியாக கைது

9 மாசி 2026 திங்கள் 15:38 | பார்வைகள் : 1157


கனடாவில் அனுமதியின்றி நபர்களைத் துன்புறுத்தி வீடியோ காட்சிகளைப் பதிவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரொறொன்றோ பொலிஸ் சேவை தெரிவித்துள்ளதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 2025 டிசம்பர் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி சந்தேகநபர் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

45 வயதான சந்தேகநபர் மீது ரொறொன்றோ பொலிஸாரால் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கனடாவின் குற்றவியல் சட்டக் கோவையின் கீழ், குற்றவியல் துன்புறுத்தல் தொடர்பாக குற்றப்பத்திரிகை மூலம் வழக்குத் தொடரப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.