வாகனப் பதிவு முறையில் பெரும் சைபர் மோசடி: கேரேஜ்கள் கடும் பாதிப்பு!
5 மாசி 2026 வியாழன் 08:54 | பார்வைகள் : 1402
சுமார் இருபது கார் கேரேஜ்கள் ஹேக்கர்களால் பாதிக்கப்பட்டுள்ளன. வாகனப் பதிவு அமைப்பில் (SIV) உள்ள பாதுகாப்பு குறைகளை பயன்படுத்தி, குற்றவாளிகள் கேரேஜ் உரிமையாளர்களின் கணக்குகளை கைப்பற்றி, அவர்களது பெயரில் நூற்றுக்கணக்கான போலி cartes grises (வாகனப் பதிவு சான்றிதழ்களை) உருவாக்கியுள்ளனர்.
இதன் நோக்கம் திருடப்பட்ட வாகனங்களை சட்டபூர்வமாக்குவதாக இருக்கலாம். இந்த மோசடிகள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள சிறிய கேரேஜ்களை குறிவைத்து நடந்துள்ளன, மேலும் இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட கேரேஜ் உரிமையாளர்களிடம், ஹேக்கர்கள் உருவாக்கிய cartes grisesகளுக்கு விதிக்கப்பட்ட வரிகளை அரசே செலுத்துமாறு கோருகிறது. இது சிலருக்கு நூற்றுக்கணக்கான ஆயிரம் யூரோக்கள் ஆகும் என்பதால், பல சிறிய கேரேஜ்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.
கார் தொழில் கூட்டமைப்பு இந்த அமைப்பு போதுமான பாதுகாப்பில்லாமல் இருப்பதாக குற்றம்சாட்டி, பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை ரத்து செய்யவும், வாகனப் பதிவு முறையை உடனடியாக பாதுகாக்கவும் அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan