மோசமடைந்து வரும் உலகக்கிண்ண கால்பந்து டிக்கெட் விவகாரம்....
3 மாசி 2026 செவ்வாய் 14:25 | பார்வைகள் : 1323
2026 உலகக்கிண்ணத் தொடருக்காக ஃபிபா வசூலிக்கும் அதிகப்படியான விலைகள், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் மாதம் 12ஆம் திகதி ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து தொடர் தொடங்குகிறது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் இணைந்து இதனை நடத்துகின்றன.
மெக்சிகோ சிட்டியில் நடைபெறும் முதல் போட்டியில் மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
உலகக்கிண்ண டிக்கெட் விவகாரம் விலை தொடர்பில் மோசமடைந்துள்ளது. ஃபிபா வசூலிக்கும் அதிகப்படியான விலைகள் அமெரிக்காவிலும், உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதேபோல், மற்ற வசதிகள் குறித்த கூடுதல் விவரங்கள் அந்த கோபத்தீயை மேலும் தூண்டிவிடுவதாக இருப்பதாக கூறப்படுகிறது.
டிக்கெட்டுகள் முன்னெப்போதும் இல்லாத அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
The Athletic பத்திரிகையின் ஹென்றி புஷ்னெலின் கருத்துப்படி, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சோஃபி மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கான பார்க்கிங்கை, ஒரு போட்டி நாளுக்கு ஒரு இடத்திற்கு 250 முதல் 300 டொலர் வரை ஃபிபா விற்பனை செய்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan