வீணாகும் உணவுகள் ஊழியர்களுக்கு: அரசின் புதிய திட்டம்!!
31 தை 2026 சனி 20:48 | பார்வைகள் : 5265
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 லட்சம் டன் உணவுப் பொருட்கள் வீணாகும் நிலையில், உணவு விற்பனை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் விற்கப்படாத ஆனால் இன்னும் உண்ணக்கூடிய பொருட்களை எளிதாக மீட்டெடுக்க அரசு அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை வசந்த காலத்திற்குள் அமுல்படுத்த விரும்பும் அரசு, சங்கங்களுக்கு வழங்கப்படாத பொருட்களை ஊழியர்கள் எடுத்துக்கொள்ள வழிவகுக்கிறது. இதன் மூலம் பெரிய கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் பயன் அடையலாம்.
பல ஊழியர்கள் இதை நல்ல செய்தியாக வரவேற்கின்றனர், ஏனெனில் தினமும் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் குப்பையில் வீசப்படுகின்றன. சில இடங்களில் இது ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், இந்த சட்டம் அதை ஒழுங்குபடுத்தும். இருப்பினும், சிலர் தவறாக பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக ஊழியர்களே எச்சரிக்கின்றனர். அதனால், அரசு தற்போது கண்காணிப்பு முறையை அறிவிக்கவில்லை என்றாலும், ஒரு ஊழியருக்கு ஆண்டுக்கு 100 முதல் 500 யூரோ வரை மட்டுமே பெற அனுமதிக்கும் உச்சவரம்பை நிர்ணயிப்பதை பரிசீலித்து வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan