இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரானின் ஏவுகனை தாக்குதல்...!
2 பங்குனி 2026 திங்கள் 14:33 | பார்வைகள் : 251
ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) விடுத்துள்ள அறிவிப்பின்படி, டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம், ஹைஃபாவில் உள்ள இராணுவ மையங்கள் மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள இஸ்ரேலிய விமானப்படைத் தலைமையகம் ஆகியவற்றை இலக்கு வைத்து கைபர் (Kheibar) ரக ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெடித்துள்ள இந்தப் போர், தற்போது துபாய், பஹ்ரைன், குவைத் மற்றும் ஈராக் எனப் பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கும் பரவியுள்ளது.
குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் கரும்புகை எழுந்ததுடன் சவூதியின் அராம்கோ (Aramco) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் விமானப்படைத் தளம் ஆகியவற்றின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த மோதல்களால் இதுவரை ஈரானில் 555 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளதுடன் வளைகுடா நாடுகளில் ஈரானின் பதிலடித் தாக்குதல்களால் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஈரானின் இந்தத் தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு இது பெரும் அச்சுறுத்தல் எனவும் எச்சரித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan