Paristamil Navigation Paristamil advert login

டெக்சாஸ் மதுபான விடுதிக்கு வெளியே துப்பாகிச்சூடு - இருவர் பலி

டெக்சாஸ் மதுபான விடுதிக்கு வெளியே துப்பாகிச்சூடு - இருவர் பலி

2 பங்குனி 2026 திங்கள் 06:34 | பார்வைகள் : 200


டெக்சாஸ் மாநிலம் ஒஸ்டின் நகரில் உள்ள மதுபான விடுதிக்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதோடு, 14 பேர் காயமடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் குறித்த விடுதிக்கு வெளியே வந்த நபர் ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது ந்பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் சந்தேக நபர் கொல்லப்பட்டார். காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபர், செனகல் நாட்டில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதலின் போது அவரது வாகனத்தில் கண்டெடுக்கப்பட்ட சில சான்றுகள் இந்தத் தாக்குதலுக்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் எப்.பி.ஐ (FBI) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கான துல்லியமான காரணம் குறித்து புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருவதுடன் , குறித்துத் தகவல் அறிந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026