வரலாற்றில் முதல் முறையாக ரஞ்சிக் கிண்ணத்தை வென்ற ஜம்மு காஷ்மீர்!
28 மாசி 2026 சனி 13:18 | பார்வைகள் : 172
ரஞ்சிக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஜம்மு காஷ்மீர் வரலாறு படைத்தது.
ஹூப்ளியில் நடந்த ரஞ்சிக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடகா அணிகள் மோதின.
முதல் இன்னிங்ஸில் ஜம்மு காஷ்மீர் 584 ஓட்டங்கள் குவிக்க, கர்நாடகா 293 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பின்னர் 291 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜம்மு காஷ்மீர், கடைசி நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளுக்கு 342 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அப்போது ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டி சமன் ஆனது.
அந்த அணியில் இக்பால் 160 ஓட்டங்களுடனும், சாஹில் 101 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்ய, யார் அதிக ஓட்டங்கள் எடுத்துள்ளார்களோ அவர்களே வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்.
அதன்படி ஜம்மு காஷ்மீர் மொத்தம் 926 ஓட்டங்கள் குவித்ததால் அந்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் ரஞ்சிக் கிண்ண வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஜம்மு காஷ்மீர் சாதனை படைத்தது.
ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan