இஸ்ரேலிய மக்களுக்கான அவசர கால எச்சரிக்கை
28 மாசி 2026 சனி 11:49 | பார்வைகள் : 253
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி இருப்பதை இஸ்ரேலிய பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.
28.02.2026 ஈரானை குறிவைத்து இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளது. இதில் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஈரானில் இருந்து இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டு இருப்பதை இஸ்ரேலிய பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.
அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்ட தகவலில், வடக்கு இஸ்ரேலின் சில பகுதிகளில் வெடிச் சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானின் தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலிய விமானப்படை முழுவீச்சில் களமிறக்கப்பட்டு இருப்பதுடன் எதிரிகளின் ஏவுகணைகளை அழிப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.
மேலும் இஸ்ரேலிய மக்களுக்கான அவசர கால எச்சரிக்கை அறிவிப்புகள் தொலைபேசி வழியாக வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வான் எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்படும் போது உடனடியாக பாதுகாப்பு அறைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அமைதியை கடைபிடிக்குமாறும், ராணுவத்தினரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை உடனுக்குடன் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan