Paristamil Navigation Paristamil advert login

RCB அணியை வாங்கும் போட்டியில் இணைந்த அமெரிக்க தொழிலதிபர்

 RCB அணியை வாங்கும் போட்டியில் இணைந்த அமெரிக்க தொழிலதிபர்

27 மாசி 2026 வெள்ளி 14:29 | பார்வைகள் : 173


RCB அணியை வாங்க கடும் போட்டி நிலவி வரும் நிலையில் அமெரிக்க தொழிலதிபர் ஒருவரும் இந்த போட்டியில் இணைந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்கள் கொண்ட அணிகளில் ஒன்றாக, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்(RCB) அணி உள்ளது.

2025 ஐபிஎல் தொடரில் முதல்முறையாக கோப்பையை வென்றதன் மூலம், RCB அணியின் சந்தை மதிப்பு 2 பில்லியன் டொலராக உயர்ந்தது.

RCB அணியின் தற்போதைய உரிமையாளராக உள்ள லண்டனை சேர்ந்த Diageo நிறுவனம், அணியை விற்க முன்வந்துள்ள நிலையில், பல தொழிலதிபர்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஹாரிஸ் பிளிட்சர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு இணை நிறுவனரும், பிளாக்ஸ்டோன் குழுமத்தின் சேர்மனுமான அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பிளிட்சர் RCB அணியில் பெரும் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் ஏற்கனவே, அமெரிக்க கால்பந்து, கூடைப்பந்து, ஐஸ் ஹாக்கி, பேஸ்பால் லீக்களில் அணிகளை வைத்துள்ளார்.

இவர் மட்டுமின்றி, Serum institute நிறுவனத்தின் CEO அதார் பூனாவாலா, அதானி குழும தலைவர் கௌதம் அதானி, JSW குழும தலைவர் பார்த் ஜிண்டா, மான்செஸ்டர் யுனைடெட்டின் இணை உரிமையாளர் அவ்ராம் கிளேசர், உலகளாவிய முதலீட்டு நிறுவனமான EQT, இந்தியாவின் பாரிய ஊடக நிறுவனமான டைம்ஸ் குழுமம், மணிப்பால் கல்வி மற்றும் மருத்துவக் குழுமத்தின் நிறுவனர் ரஞ்சன் பாய் ஆகியோர் RCB அணியில் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.