பங்களாதேசத்தில் பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை
24 மாசி 2026 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 159
பங்களாதேசத்தில் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் சந்த்பூர் மாவட்டம் பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உடல் ஊனமுற்றவரான குறித்த பெண், இசை நிகழ்ச்சி ஒன்றைக் காணச் சென்றிருந்தபோது மூன்று ஆண்கள் அவரைக் கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சிக் காலத்தில் ஹிந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
தற்போது வங்கதேச தேசியவாத கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அரசு பதவியேற்றுள்ள நிலையில், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் குறையும் என எதிர்பார்ப்பு நிலவியது.
புதிய அரசு அமைந்த ஒரே வாரத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை கவலைக்கிடமாக பார்க்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan