பிரித்தானியாவில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு - உரை ரத்து - நாமல் விளக்கம்
23 மாசி 2026 திங்கள் 10:14 | பார்வைகள் : 298
பிரித்தானியாவில் தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தாம் கலந்து கொண்டு உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை தான் நிபந்தனையற்ற முறையில் ஏற்றுக்கொண்ட போதிலும், சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாக, உரையாடல்கள் மற்றும் விவாத அமர்வுகளை ரத்து செய்ய ஏற்பாட்டுக் குழுவினருக்கு நேரிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக, கலந்துரையாடல்கள் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதும், அச்சுறுத்தல்கள் மூலம் மௌனமாக்குவதை விட தர்க்கரீதியான வாதங்கள் மூலம் அணுகுவதும் சமூகத்திற்கு முக்கியமானது என அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தமக்கு அழைப்பு விடுத்தமைக்காக இரு சங்கங்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் ஆரோக்கியமான விவாதங்களை ஊக்குவிக்கும் ஒரு தளத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
ஒக்ஸ்போர்ட் சங்கம் மற்றும் கேம்பிரிட்ஜ் சங்கத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தளங்களுக்கு அழைக்கப்படும் பேச்சாளர்கள், புத்திசாலித்தனமான மற்றும் விமர்சன ரீதியான பார்வையாளர்களுக்கு முன்னிலையில் கடினமான கேள்விகளை எதிர்கொள்வார்கள் என்றும், தமது கருத்துக்களைப் பாதுகாப்பதோடு மாற்றுக் கருத்துக்களுடன் ஈடுபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழுமியங்களுக்கு மதிப்பளித்தே தாம் இந்த அழைப்பை நிபந்தனையற்ற முறையில் ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாக இந்த உரையாடல்கள் மற்றும் விவாத அமர்வுகளை ரத்து செய்ய நேரிட்டது வருத்தத்திற்குரியது. இடையூறு விளைவிப்பதை விட கலந்துரையாடல் மூலம் கருத்துக்களை முன்வைப்பதும், அச்சுறுத்தல் மூலம் மௌனமாக்குவதை விட தர்க்கம் மூலம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதும் சமூகத்திற்கு மிக முக்கியமானது என்பதை இது காட்டுகிறது.
பயனுள்ள நல்லிணக்கமும் முன்னேற்றமும் திறந்த உரையாடல்கள் மூலம் வெவ்வேறு பார்வைகள் சந்திக்கும் போது மட்டுமே சாத்தியமாகும். எனவே, எனது கருத்துக்களுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் உட்பட அனைத்து விமர்சகர்களையும் நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை நான் வரவேற்கிறேன். இத்தகைய தொடர்புகளையும் வாய்ப்புகளையும் நிராகரிப்பது ஜனநாயகத்தை வலுப்படுத்தாது. விவாதம் இன்றி பிளவுகள் மூலம் உறவுகளைக் கையாள்வது பலவீனமான செயலாகும்.
இரு சங்கங்களும் விடுத்த அழைப்பிற்காக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்கள் எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலையை நான் புரிந்துகொள்கிறேன். எதிர்காலத்தில் உரையாடல்களை ஊக்குவிக்கும் ஒரு தளத்தில் மீண்டும் சந்திப்போம் என நம்புகிறேன். நாமல் ராஜபக்ஷ தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan