Saint-Denis: அமெரிக்காவிலிருந்து 125 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது!!
22 மாசி 2026 ஞாயிறு 07:56 | பார்வைகள் : 2600
Saint-Denis பகுதியில் கைது செய்யப்பட்ட இரு முப்பது வயதினை உடையவர்கள் அமெரிக்காவிலிருந்து 125 கிலோ கஞ்சாவை Aéroport de Paris-Charles-de-Gaulle (Roissy) வழியாக கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
சுமார் 1.2 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள இந்த போதைப்பொருளுடன் அவர்கள் பிடிபட்டு, Paris நகரில் “போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களின் கூட்டுச்சதி” குற்றச்சாட்டில் விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் தாங்கள் வெறும் போக்குவரத்து பணிக்காகவே பணம் பெற்றதாகவும், அது போதைப்பொருள் எனத் தெரியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், பிரான்சுக்கு கஞ்சா இறக்குமதி செய்யப்படும் புதிய விமானப் பாதைகள் அதிகரித்து வருவதை காட்டுகிறது. முன்பு மறோக் மற்றும் ஸ்பெயின் சாலை வழியாக வந்த கஞ்சா, இப்போது கனடா, அமெரிக்கா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து பெருமளவில் Roissy விமான நிலையம் ஊடாக வருகிறது.
ஒரு மாதத்திற்குள் 170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் நாட்டுக்குள் நுழையும் போதைப்பொருளில் சுமார் 10% மட்டுமே கைப்பற்றப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan