பிலிப்பின்ஸ் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
21 மாசி 2026 சனி 09:11 | பார்வைகள் : 170
தென்கிழக்கு பிலிப்பின்ஸில் பெய்து வரும் தொடர் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள மாட்டி நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதில், பெரிய பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில் அங்கிருந்த ஒரு வீடு முழுமையாக புதைந்தது. அந்த வீட்டில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனர்.
இதேபோல், டாவோ டீ ஓரோ மாகாணத்தில் உள்ள மொன்காயோ நகரிலும் நிலச்சரிவால் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேர் உயிரிழந்தனர்.
தொடர் மழையினால் இந்தப் பகுதியில் சுமார் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கையாக 3,200-க்கும் மேற்பட்டோர் அரச நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan